பொறுமையாக இருந்தால் பெற வேண்டிய அனைத்தையும் பெறலாம் .
Sunday, 18 December 2016
Friday, 25 November 2016
அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம்… பன்முகம் கொண்ட மஞ்சள் மகிமைகள்!
கிருமி நாசினி… எளிய முதலுதவி! இதன் கிருமி நாசினி (ஆன்டிசெப்டிக்) பண்பை அறிய நம் முன்னோர் யாரும் யுனிவெர்சிட்டியில் படித்தேறவில்லை. வீட்டில் எவருக்கேனும் அடிபட்ட காயமா? சீழ்கட்டியா? விஷக்கடியா? நம் வீட்டுப் பெரியவர் போடும் மஞ்சள்பற்று, ஒரு தலைச்சிறந்த எமெர்ஜென்ஸி ஃபஸ்ட் எய்ட் என்பது நவீன உலகம் இன்று கூறும் அறிவியல் உண்மை. அம்மை நோய் காலங்களிலும், பெண் பிள்ளை பூப்பெய்தும் காலங்களிலும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் சடங்கும் இதே கிருமி நாசினி கோட்பாடே. அழகுப் பராமரிப்பு அன்றைய மஹாராணிகள் முதல் இன்றைய மாடர்ன் ராணிகள் வரை, தங்கள் மேனி அழகுப் பராமரிப்பில் மஞ்சள் பொடிக்கு ஒரு முக்கிய இடம் தந்துள்ளனர். “என்ன சார், இப்ப எந்த மாடர்ன் ராணி மஞ்ச தேய்ச்சு குளிக்குறாங்களாம்?” என்பது ஆடவரின் கேள்வி. ஆம், போலி கௌரவமும், மேற்கின்பால் கொண்ட வெற்று மோகமும் இப்பழக்கத்தை சிறிது குறைத்திருக்கிறது எனினும், “டர்மரிக் சோப் கெடைக்குமா..? டர்மரிக் கலந்த நேச்சுரல் பிம்பிள் க்ரீம் இருக்கா..?” எனத் தேடித் தேடி வாங்கும் இன்றைய பெண்களின் உளவியலில், மஞ்சளின் அருமையை உணர்ந்த அன்றைய அழகிய மஹாராணிகளின் ஜீன்கள் இன்னும் வேலை செய்துகொண்டுதான் இருக்கின்றன! மேனியும் முகமும் ஒளிர ஓர் எளிய குறிப்பு மஞ்சள் குழைத்து இரவு படுப்பதற்கு முன் முகத்தில் பூசி, சில நிமிடங்களில் குளிர்ந்த நீரில் கழுவிடலாம். பின் காலை எழுந்ததும், முகத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து, பச்சைப்பயறு மாவிட்டு கழுவினால், எந்த ஃபேஸ் க்ளென்சருடனும் தங்களுக்கு இனி ஜோலி இல்லை. மஞ்சளும் மங்களமும் திருமணத்தில் மங்கள சூத்திரமாய், அட்சதையாய், கங்கணமாய் நன்னாட்களில் வாசல் முற்றங்களில் குங்குமத்துடன் பூசப்பட்ட கலவையாய், பொங்கல் பானைகளில் சுற்றிக் கட்டப்பட்டது மஞ்சள். தடைகளைத் தகர்க்கும் விநாயகனை மஞ்சளில் பிடித்து வழிபடுவதும் மங்களத்தைக் குறிக்கும். இப்படி, ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்த மஞ்சள், மங்களத்திற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் மங்களத்தின் சின்னமாய் புருவ மத்தியிலும், மணமானோர் நெற்றி வகிடிலும் குங்குமத் திலகம் இடுவது வெறும் சடங்கோ, அழகுக்கோ மட்டும் அல்ல. பொருள் உலகின் நன்மைகளை அடைய நம் உடல், மன கட்டமைப்பிற்கு இது உறுதுணையாக இருக்கின்றது. மஞ்சளோடு, சிறிது சுண்ணாம்பு, கற்பூரம் கலந்து தயாரிக்கப்படுவதே குங்குமம். “குடும்பத்தின் ஆண் முக்தி நோக்கம் கொண்டு விபூதி இடுவதும், பெண் பொருள் உலக நன்மைக்காக குங்குமம் இடுவதும் வாழ்வில் சமநிலை நிலவ உதவும் சிறு உபாயம்,” என்பது சத்குருநாதர் வாக்கு. பன்முகப் பயிர் “தசாவதாரம்“ கமல்ஹாசன் போல பயிர்களில் மஞ்சள் ஒரு வெர்சடைல் ஹீரோ என்று சொல்லலாம். உணவில் நறுமணமூட்டி, நிறமூட்டி, சுவையூட்டி, உட்கொள்ளும் மருந்து, வெளிப்பூச்சு மருந்து, அழகு சாதனப் பொருள், மங்கள நிகழ்வுகளில் முக்கிய பங்கு, ஆன்மீக வாழ்வின் இன்றியமையா அம்சம் என வெர்சடைல் விருதினை அள்ளிக் கொள்கிறது மஞ்சள். மஞ்சள் சில குறிப்புகள்… ஜீரண மண்டலம் ஒருவரது ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை பொறுத்தே அவரது உடல் ஆரோக்கியம் அமைகிறது என்பது இந்திய மருத்துவ முறைகளின் ஒரு முக்கிய கோட்பாடு. “வயிறுல தான் உயிர் இருக்கு” என்பது தமிழ் மருத்துவத்தின் வழக்கு மொழி. பொதுவாக, குறைந்த செரிமான சக்தி, உண்டபின் ஏற்படும் வயிறு மந்தம் போன்ற நிலைகளுக்கு மஞ்சள் ஓர் அற்புத நிவாரணி. மதிய உணவு உண்டபின், ஒரு சிட்டிகை அளவு மஞ்சளை சிறிது மோருடன் கலந்து எடுப்பது செரிமான சக்தியை தூண்டும். வலி நிவாரணி மூட்டு வலி, சுளுக்கு, வீக்கம் போன்ற வலிகளுக்கு, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் இரு சிட்டிகை தோல் நீக்கிய இஞ்சியை சேர்த்து நீர்விட்டு அரைத்து கொள்ளவும். ஒரு சுத்தமான துணியில் அதனை பரப்பி, வலிகண்ட இடத்தில் கட்டிக்கொள்ளவும். இரத்த சோகை தினம் காலை ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்த நீரை, தேனுடன் கலந்து பருக வேண்டும். கண்வலி ஒரு ஸ்பூன் நசுக்கிய மஞ்சளை ஒரு டம்ளர் அளவு சுத்தமான நீரில் கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டிய பின்னர், இந்த நீரில் துணியை நனைத்து, கண்களின் மேல் போட்டுக்கொள்ளலாம். வலியை குறைக்கும். மஞ்சள் பற்றி சத்குரு: மஞ்சள் சிறந்த சுத்திகரிப்பான் மஞ்சள் இரத்தத்தை சுத்தம் செய்து உங்களின் சக்தி அமைப்பில் தெளிவை ஏற்படுத்த வல்லது. மஞ்சள் உடல்நிலையில் மட்டும் அல்லாது உங்கள் சக்தி நிலையிலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெளிப்புற தூய்மைக்கு ஒரு சிட்டிகை மஞ்சளை ஒரு வாளி தண்ணீரில் இட்டு, குளித்து வந்தால் தேகம் புத்துணர்வுடன் பிரகாசிக்கும். கபம் நீக்கும் வல்லமை கபம் சார்ந்த தொல்லைகளால் அனுதினமும் இரு நாசிகளிலும் அடைப்பு ஏற்பட்டு அவதிப்படுவோர், மிளகு, தேன், வேப்பிலை, மஞ்சள் சேர்ந்த கலவை எடுப்பது ஆகச்சிறந்த பலனை அளிக்கும். 10 முதல் 12 குறு மிளகை நசுக்கி, இரண்டு ஸ்பூன் தேனில் ஓர் இரவு (8 முதல் 10 மணி நேரம்) ஊறவைக்க வேண்டும். காலையில் இந்தக் கலவையை உட்கொள்ள வேண்டும்; மிளகை மென்று உண்ணலாம். தேனுடன் சிறிது மஞ்சளையும் கலந்து எடுத்துக் கொள்வதும் பலன் அளிக்கும். பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தவிர்த்தாலே கபம் படிப்படியாய் குறையும். யோக சாதனைகளுக்கு மஞ்சளின் உதவி இந்த மண்ணில் இருந்து பெறப்படும் எந்த ஒரு பொருளுக்கும், உங்கள் உடல் உட்பட, ஒரு செயல் அற்ற தன்மை (inertia மந்தத்தன்மை) உண்டு. இது குறித்த கூர்ந்த விழிப்புணர்வோடு, இந்தச் செயல் அற்ற தன்மையின் அளவை நம் உடலில் மிகக் குறைவாக வைத்துக் கொள்வது அவசியம். பொதுவாக, நீங்கள் எந்த அளவு விழிப்புணர்வுடன் உள்ளீர்கள் மற்றும் உங்களது தூக்கத்தின் அளவு எவ்வளவு? என்பதை வைத்து உங்கள் யோக சாதனை வேலை செய்கிறதா இல்லையா என்பதை நாம் அறிகிறோம். உள்ளபடி, நாம் அளப்பது இதன் மூலம் உங்கள் உடல் உற்பத்தி செய்யும் “செயல் அற்ற தன்மையைத்தான்”!! ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியை உங்கள் செல் கட்டமைப்பு கிரகிப்பதை உங்கள் உடல் அனுமதிக்கவில்லை எனில், இந்த செயல் அற்ற தன்மையின் அளவு அதிகரிக்கும். மஞ்சள் வேம்பு கூட்டணி, உடலின் செல்லுலார் கட்டமைப்பை விரிவடையச் செய்வதால், சக்தி, உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் பாய்வதற்கு வழிவகை செய்கிறது. மஞ்சளும், வேம்பும் பொருள் நிலையில் உங்கள் சாதனைக்கு நல்ல துணை எனினும், யோகப் பயிற்சிகளால் மட்டுமே கூட உங்கள் உடல் முழுதும் சக்தியை சீரிய முறையில் செலுத்த முடியும். யோகப் பயிற்சிகள் மூலம் உடலில் உருவாக்கப்படும் அளப்பரிய சக்தியை, ஒரு கப் ஸ்ட்ராங்க் காபி அல்லது சிகரெட் போன்ற நரம்பு ஊக்கப் பொருட்களால் கூட உங்களுக்கு வழங்க முடியும். ஆனால், இந்த நரம்பு ஊக்கிகளுக்கு உடலின் செல்லுலார் கட்டமைப்பை விரிவடையச் செய்து, அதன் மூலம் சக்தியை தேக்கி வைத்து நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்தும் ஆற்றல் கிடையாது. இவை மூலம் உருவாக்கப்படும் சக்தி சேமிக்கப்படுவதற்கு மாறாக, அக்கணமே வெளிப்பட்டு விடுவதால் பாதிப்பையே ஏற்படுத்துகின்றது. பாதிப்பு உங்கள் உடலுக்கு மட்டும் அல்ல, உங்கள் மனம், உங்கள் செயல் மற்றும் உங்களை சுற்றியுள்ள சூழ்நிலை என அனைத்தும் பாதிப்படைகின்றன. நம் உடலில் சக்தியை உருவாக்கும்போது, மிக முக்கியம் யாதெனில், அது தானாக வெளிப்பட்டு சிதையக்கூடாது. மாறாக, பெருக்கப்படும் சக்தியை நம் உடலில் சேமித்தும், நம் விருப்பத்தின் பெயரிலேயே சக்தி வெளிப்படுவதும் மிக அவசியம். வேம்பு மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து உண்பது, நம் உடலின் செல் கட்டமைப்பை சுத்தி செய்து விரிவடையச் செய்யும் சிறந்த வழி. இதன் மூலம் சக்தியை உடல் கிரகிக்கும் தன்மை மேம்படுகிறது. நீங்கள் யோகப் பயிற்சி செய்யும்போது செல்களின் இந்த விரிவடைந்த நிலை உங்கள் தசைகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும். இந்த நெகிழ்வுத் தன்மை உங்கள் உள்கட்டமைப்பை சீராக மிக சக்திவாய்ந்த சாத்தியமாக வடிவமைக்கும். ஒரு புதுவித சக்தியால் உங்கள் உடல் துள்ளுவதை, ஆசனப்பயிற்சிகள் செய்யும்போது நீங்களாகவே உணரமுடியும். நன்றி: மருத்துவ குறிப்புகள் – சித்த மருத்துவர் சக்தி புவனாம்பிகை, ஈஷா ஆரோக்யா மருத்துவமனை, சேலம். குறிப்பு: இதுபோல், மருத்துவ பயன்பாட்டிற்காக மஞ்சளைப் பயன்படுத்தும்போது, அது இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்டதா என்பதைப் பார்த்து வாங்குவது சிறந்தது. இன்று மிதமிஞ்சிய அளவில் கலப்படும் செய்யப்படும் பொருட்களில் மஞ்சளும் மிளகும் முக்கிய இடம் வகிக்கின்றன.அதனால் இவற்றை உண்ணும்போது தரமான மஞ்சள் தானா என்று அறிந்து வாங்குவது நல்லது. நேரடியாக விவசாயிகளிடமிருந்து சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். ஈஷா யோக மையத்தில் தினசரி காலையில் வேம்புடன் உட்கொள்ளப்படும் மஞ்சள் விவசாயம் செய்யும் நம் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்து நேரடியாக பெறப்படுகிறது. தரம் உறுதி செய்யப்படுகிறது. மஞ்சள் பொடியாகவும், வெறும் வயிற்றில் உண்பதற்கு ஏற்ற மாத்திரையாகவும் ஈஷா ஆரோக்யாவில் கிடைக்கின்றது.
Read more at : அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம்… பன்முகம் கொண்ட மஞ்சள் மகிமைகள்! http://isha.sadhguru.org/blog/ta/azhagu-arogyam-anmeegam-panmugam-konda-manjal-mahimaigal/
Read more at : அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம்… பன்முகம் கொண்ட மஞ்சள் மகிமைகள்! http://isha.sadhguru.org/blog/ta/azhagu-arogyam-anmeegam-panmugam-konda-manjal-mahimaigal/
Wednesday, 16 November 2016
Friday, 28 October 2016
இணையதள மையம் உருவாக்க
வணக்கம்,
இணையதள மையம் உருவாக்க
மைத்துனர் அவர்களைத் தொடர்புகொள்ளவும்.
sddnesh@gmail.com
இணையதள மையம் உருவாக்க
மைத்துனர் அவர்களைத் தொடர்புகொள்ளவும்.
sddnesh@gmail.com
Wednesday, 26 October 2016
மென் பொருள் வடிவமைப்பு
வணக்கம்,
நம்ம ஊரில் உள்ள மென் பொறியாளரிடம் சொல்லி,
நமக்குத் தேவையான மென் பொருளை வடிவமைத்து வாங்குவதே
சிறந்தது.
நம்ம ஊரில் உள்ள மென் பொறியாளரிடம் சொல்லி,
நமக்குத் தேவையான மென் பொருளை வடிவமைத்து வாங்குவதே
சிறந்தது.
Thursday, 29 September 2016
பில்
பில் செய்ய இலவச இணையத்தளம்
http://www.ezeefrontdesk.com/?gclid=CKe5m_eutM8CFYaVvAod1dgAQA
http://www.ezeefrontdesk.com/?gclid=CKe5m_eutM8CFYaVvAod1dgAQA
http://www.kwhotel.com/
http://www.ezeefrontdesk.com/?gclid=CKe5m_eutM8CFYaVvAod1dgAQA
http://www.ezeefrontdesk.com/?gclid=CKe5m_eutM8CFYaVvAod1dgAQA
http://www.kwhotel.com/
Tuesday, 13 September 2016
தயார்நிலை வீடுகள்
தயார்நிலை வீடுகள்
பற்றிய தகவல்கள் அறிய
http://rajan-c-mathew.blogspot.in/2013/05/low-cost-pre-fabricated-houses.html
திருச்சி www.gsteel.com நிறுவனம்.
பற்றிய தகவல்கள் அறிய
http://rajan-c-mathew.blogspot.in/2013/05/low-cost-pre-fabricated-houses.html
திருச்சி www.gsteel.com நிறுவனம்.
Sunday, 14 August 2016
காய்ச்சல்
காய்ச்சல் வந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1. காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும்.
2. தாகம் எடுத்தால், வெந்நீரை ஆறவைத்தோ, வெதுவெதுப்பாகவோ பருக வேண்டும். தாகம் இல்லாமல் ஒரு சொட்டு நீர் கூட பருக வேண்டாம்.
3. காய்ச்சல் துவக்கநிலையில் இருக்கையில், பசிக்கும்போது, அரிசிக் கஞ்சி, இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இட்லி இடியாப்பத்திற்கு சர்க்கரை தொட்டுக் கொண்டால் நல்லது. குழம்பு, சட்னிகளைத் தவிர்க்க வேண்டும்.
4. காய்ச்சல் உயர்ந்து பின்னர் இறங்கும். அந்த நிலையில் பசிக்கும்போது, இரசம் ஊற்றி சோற்றை நன்கு கரைத்து உட்கொள்ளலாம். இரசத்தில் புளிக்குப் பதில் தக்காளி சேர்ப்பது நல்லது. இதற்கு பருப்புத் துவையல், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் வகைகள் தொட்டுக்கொள்ளலாம்.
5. காய்ச்சலின் அளவு மிகவும் அதிகமானால், குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் தரவேண்டும். உடல் குளிரும் அளவுக்கு ஒத்தடம் தரக் கூடாது. அதிக வெப்பம் குறையும் அளவு தந்தால் போதும்.
6. காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள்.
7. மேற்கண்ட உணவுகள் தவிர வேறு எந்தவகை உணவையும் பானத்தையும் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக, பால் பொருட்களை நிறுத்திவிடுவது மிக முக்கியம்.
8. நிலவேம்பு போன்ற கசாயங்களைப் பருகும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது. முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிலவேம்பு போன்ற மருந்துகளைப் பருகுவது நல்லதல்ல.
இவை தவிர காய்ச்சல், சளி ஆகிய தொல்லைகளின்போது உடலுக்கு உதவி செய்யும் சில உணவு மருந்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவை செம்மை நலமையங்களில் கற்றுத்தரப்படுபவை.
சளி வெளியேற்றத்திற்கு உதவி செய்யும் உணவு மருந்துகள்
மிளகு கசாயம்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 7 எண்ணிக்கை
இவ்விரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பின்னர் சட்டியில் இவற்றை ஒன்றாகக் கொட்டி, நன்கு தேக்கரண்டிகள் பனை வெல்லத் தூளைத் தூவ வேண்டும். வெல்லத் தூள் பாகுபோல் உருகும். இப்பாகு சட்டியில் ஒட்டாமல் கிளற வேண்டும். பின்னர், ஒன்றரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சுண்டக் காய்ச்சிய பின்னர் அடுப்பை நிறுத்தி விட்டு, இந்த நீரில் பின்வரும் இலைகளைப் போட வேண்டும்:
1. துளசி
2. கற்பூர வல்லி (ஓம வல்லி)
3. வேப்பிலைக் கொழுந்து
இவ்விலைகளைப் போட்ட பின்னர் மூடி வைத்து வெதுவெதுப்பான சூட்டில் பருக வேண்டும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. காய்ச்சிய நீரைப் பருகலாம்.
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 7 எண்ணிக்கை
இவ்விரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பின்னர் சட்டியில் இவற்றை ஒன்றாகக் கொட்டி, நன்கு தேக்கரண்டிகள் பனை வெல்லத் தூளைத் தூவ வேண்டும். வெல்லத் தூள் பாகுபோல் உருகும். இப்பாகு சட்டியில் ஒட்டாமல் கிளற வேண்டும். பின்னர், ஒன்றரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சுண்டக் காய்ச்சிய பின்னர் அடுப்பை நிறுத்தி விட்டு, இந்த நீரில் பின்வரும் இலைகளைப் போட வேண்டும்:
1. துளசி
2. கற்பூர வல்லி (ஓம வல்லி)
3. வேப்பிலைக் கொழுந்து
இவ்விலைகளைப் போட்ட பின்னர் மூடி வைத்து வெதுவெதுப்பான சூட்டில் பருக வேண்டும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால் பரவாயில்லை. காய்ச்சிய நீரைப் பருகலாம்.
முறை:
உறங்கச் செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பு பருகலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் பருக வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பு பருகலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் பருக வேண்டும்.
தூதுவளை வறுவல்
தூதுவளை இலைகளை (நான்கு அல்லது ஐந்து) நெய்யில் வதக்கி, ஒரு பிடிச் சோறுடன் பிசைந்து உண்ண வேண்டும்.
முறை:
மாலை வேளையில் உண்ண வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் உட்கொள்ள வேண்டும்.
தூதுவளை இலைகளை (நான்கு அல்லது ஐந்து) நெய்யில் வதக்கி, ஒரு பிடிச் சோறுடன் பிசைந்து உண்ண வேண்டும்.
முறை:
மாலை வேளையில் உண்ண வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும்தான் உட்கொள்ள வேண்டும்.
சீரகத் தண்ணீர்
ஒரு சட்டித் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதே சூட்டில், சிறிய தேக்கரண்டி சீரகம், ஏழு மிளகுகள் போட்டு மூடி வைத்து விட வேண்டும். வெதுவெதுப்பான பதத்தில் பருகலாம். ஒவ்வொரு முறை பருகும்போதும் சன்னமாகச் சூடேற்றிக் கொள்வது நல்ல பலன் தரும்.
சூழல் சரியாகும் வரை, வழக்கமான குடிநீருக்குப் பதில் சீரகநீரை மட்டுமே பருகுவது மிகுந்த நற்பலனைத் தருகிறது. செரிமானம் மேம்படவும், சளி வெளியேறவும், மூச்சுச் சிக்கல்களைச் சீர்செய்யவும் சீரக நீர் உதவியாக உள்ளது. காய்ச்சலில் இருப்போர், சீரக நீர் பருக வேண்டாம். வெந்நீரை ஆறவைத்து மட்டுமே பருக வேண்டும். சளித் தொல்லையில் இருப்போரும், காய்ச்சலுக்குப் பின்னும், செரிமானச் சிக்கல் உள்ளோரும் சீரக நீர் பருகலாம்.
ஒரு சட்டித் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அதே சூட்டில், சிறிய தேக்கரண்டி சீரகம், ஏழு மிளகுகள் போட்டு மூடி வைத்து விட வேண்டும். வெதுவெதுப்பான பதத்தில் பருகலாம். ஒவ்வொரு முறை பருகும்போதும் சன்னமாகச் சூடேற்றிக் கொள்வது நல்ல பலன் தரும்.
சூழல் சரியாகும் வரை, வழக்கமான குடிநீருக்குப் பதில் சீரகநீரை மட்டுமே பருகுவது மிகுந்த நற்பலனைத் தருகிறது. செரிமானம் மேம்படவும், சளி வெளியேறவும், மூச்சுச் சிக்கல்களைச் சீர்செய்யவும் சீரக நீர் உதவியாக உள்ளது. காய்ச்சலில் இருப்போர், சீரக நீர் பருக வேண்டாம். வெந்நீரை ஆறவைத்து மட்டுமே பருக வேண்டும். சளித் தொல்லையில் இருப்போரும், காய்ச்சலுக்குப் பின்னும், செரிமானச் சிக்கல் உள்ளோரும் சீரக நீர் பருகலாம்.
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு உங்கள் மற்றும் உங்கள் உற்றார் உடல்நலனை மேம்படுத்திக்கொள்ளுங்கள். உடலின் வெப்பநிலை மாற்றங்களை நோய் எனப் புரிந்துகொண்டு அஞ்சாதீர்கள். மிக முக்கியமாக, காய்ச்சல்களுக்கு வைக்கப்படும் பெயர்களின் மீது அக்கறை காட்டாதீர்கள்.
மருந்தில்லா வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் இலட்சக் கணக்கான மக்கள் காய்ச்சலைக் கண்டு கலங்காமல் வாழ்கிறார்கள். ஒருவகையில், காய்ச்சல் வந்தால் மகிழ்ச்சி அடையும் மனிதர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். உடலின் உள்ளே இருக்கும் கழிவு உயிரிகளை வெளியேற்றும் வெப்பத்தை வரவேற்பதுதானே உண்மையான அறிவியல்!
Saturday, 13 August 2016
மிதிவண்டி
மிதிவண்டி பொருள்கள் வாங்க
இந்த இணையத்தளம் பார்க்கவும்.
https://www.cyclinghub.in/contact-us/
இந்த இணையத்தளம் பார்க்கவும்.
https://www.cyclinghub.in/contact-us/
Tuesday, 9 August 2016
Saturday, 25 June 2016
உணவுத் திருவிழா
வணக்கம் ,
இந்திய உணவுத் திருவிழா அறிய
இந்த இணையதளம் பார்க்கவும்.
http://www.tofairs.com/fairs.php?fld=20&rg=2&cnt=1065&cty=&sct=
இந்திய உணவுத் திருவிழா அறிய
இந்த இணையதளம் பார்க்கவும்.
http://www.tofairs.com/fairs.php?fld=20&rg=2&cnt=1065&cty=&sct=
Sunday, 12 June 2016
பள்ளிக் கூடம்
பள்ளிக் கூடம்
WOW KIDS
SMART SCHOOL JUNIOR
AMERICAN KIDZ PLAY
http://franchise.littlemillennium.com/
ALL INDIA IT ASSOCIATION
shemrock.
Dreamz Pre School
.gif)
Kinder Garden Pre-School & Day Care
Sunday, 5 June 2016
hoonda dealer
http://becomehcildealer.hondacarindia.com/TermConditions.aspx
: sekar muththaiya
darasuram
: sekar muththaiya
darasuram
Monday, 30 May 2016
வியாபார தகவல் தளம்
வியாபார தகவல் தளம்
http://www.startupbizhub.com/startup-goat-farming-business.htm
Sunday, 29 May 2016
Sunday, 22 May 2016
Friday, 20 May 2016
வியாபாரம் அமைப்பாளர்
வியாபாரம் அமைப்பாளர்
அனைத்து வகையான வியாபார துவக்கத்திற்கு அணுகவும்.
வீரா
283 வடக்கு வீதி
தாராசுரம்
கும்பகோணம்
9843799358
vira2300@gmail.com
விவரங்கள்
1. எண்ணெய் கடை
2. நகை அடகு கடை
3. கணினி சேவை மையம்
4. இணையதளம் சேவை மையம்
5. துணிக்கடை
6. மண்புழு உரம் தயாரிப்பு இடம்
7. ஹோட்டல்
8. பெட்ரோல் பங்க்
9. ஜோதிட நிலையம்
10. லாட்ஜ்
11. ஜூஸ் கடை
12. டீ கடை
அனைத்து வகையான வியாபார துவக்கத்திற்கு அணுகவும்.
வீரா
283 வடக்கு வீதி
தாராசுரம்
கும்பகோணம்
9843799358
vira2300@gmail.com
விவரங்கள்
1. எண்ணெய் கடை
2. நகை அடகு கடை
3. கணினி சேவை மையம்
4. இணையதளம் சேவை மையம்
5. துணிக்கடை
6. மண்புழு உரம் தயாரிப்பு இடம்
7. ஹோட்டல்
8. பெட்ரோல் பங்க்
9. ஜோதிட நிலையம்
10. லாட்ஜ்
11. ஜூஸ் கடை
12. டீ கடை
Wednesday, 18 May 2016
இலவச பில் போடும் இணையத்தளம்
இலவச பில் போடும் இணையத்தளம்
http://www.gofrugal.com/thankyou.html?business=1&vertical=1101
free billing software for provisional store ..... type in google search.
வாகனம் நிறுத்தும் இடம்
வாகனம் நிறுத்தும் இடம்,
தாரளமாக வாகனங்கள் நிறுத்த இடம் இருந்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.
தாரளமாக வாகனங்கள் நிறுத்த இடம் இருந்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.
வியாபார இணையதளங்கள்
வியாபார இணையதளங்கள்
http://moneyexcel.com/4014/40-small-business-ideas-with-low-investment
http://moneyexcel.com/10373/90-business-ideas-with-low-investment
http://moneyexcel.com/4014/40-small-business-ideas-with-low-investment
http://moneyexcel.com/10373/90-business-ideas-with-low-investment
Tuesday, 17 May 2016
Saturday, 14 May 2016
இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை
இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறை அறிய
online billing software
வியாபாரத்திற்கு உகந்தது.
இதில் ஒரு மாதத்திற்கு இலவச சேவை உள்ளது.
online billing software
வியாபாரத்திற்கு உகந்தது.
இதில் ஒரு மாதத்திற்கு இலவச சேவை உள்ளது.
வியாபார மையம்
வியாபார மையத்தை
கண்காணிப்புக் காமராக் கொண்டுக்
கண்காணிக்கும் முறை
How to manage business place using cctv camera from home with the help of internet
கண்காணிப்புக் காமராக் கொண்டுக்
கண்காணிக்கும் முறை
கரும்புச் சாறு தானியங்கி எந்திரம்
கரும்புச் சாறு தானியங்கி எந்திரம் .
Best Power, Performance & Price Sugarcane Juicer -TT750D
Best Power, Performance & Price Sugarcane Juicer -TT750D
sugarcanejuicer@gmail.com
Friday, 13 May 2016
Saturday, 23 April 2016
எண்ணெய்க் குளியல்
எண்ணெய்க் குளியல்

எண்ணெய்க் குளியலின் பயன்கள்:
தமிழ் மருத்துவத்தின் ஆதார நூல்களில், எண்ணெய்க் குளியலின் பயன்களாக விவரிக்கப்படுபவை: உடல் சூடு தணியும் உடல் சோர்வு, உடல் வலி நீங்கும் நல்ல உறக்கம் மெய், கண், செவி, நாசி, வாய் என புற உலகோடு நாம் தொடர்புகொள்ள உதவும் ஐம்புலன்களுக்கும் தெளிவு தோல், கூந்தல் செழுமை ஆயுள் விருத்தி உடலில் பித்தம் அதிகமாதலால் ஏற்படும் குருதி அழல் (நவீன மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்தம்), மூலச்சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், மன நிலையில் சமநிலையின்மை, வெகுவான பிரயாணம், அதிக வெப்ப சூழ்நிலையில் பணி போன்ற நிலைகளில் எண்ணெய்க் குளியலின் மகத்துவம் எளிதில் விளங்கும். மேற்கத்திய அறிவியல் ஆராய்ச்சிகளில், ‘எண்ணெய்க் குளியல்’ பற்றிய விரிவான ஆய்வுகள் இதுவரை இல்லை. எனினும், சிறு சிறு ஆய்வுகள் மூலம் எண்ணெய்க் குளியலால் மன அழுத்தம் குறைந்ததற்கான சான்றுகள் உள்ளன.
‘எண்ணெய்க் குளியல்’ முறை:
உகந்த நாட்கள்:
ஆண்கள்: புதன் மற்றும் சனி
பெண்கள்: செவ்வாய் மற்றும் வெள்ளி
உகந்த நேரம்: காலை 5 முதல் 7 மணிக்குள்
உகந்த எண்ணெய்:
தென்னிந்திய பகுதியில் வாழ்பவர்களுக்கு நல்லெண்ணெய் சிறந்தது நல்லெண்ணெயோடு பூண்டு, சிகப்பு மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, சீரகம் உடையும் பதத்தில் இறக்கி தாங்கும் சூட்டில் பயன்படுத்த வேண்டியது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. இதனை மொத்தமாய் காய்ச்சி வைத்தும் பயன்படுத்தலாம். ‘கபம்’ சார்ந்த தொல்லை இருப்பின் இதை உடல் முழுதும் தேய்த்து, தலையில் மிகக் குறைந்த அளவில் இட்டுக்கொள்ளலாம். (மாறாக கபத்தன்மை உடையோர்க்கென பிரத்யேகமான மூலிகை தைலங்களை (பீனிச தைலம்) தாராளமாய் பயன்படுத்தலாம். இவை சைனஸ் தொந்தரவு குறைவதற்கு உதவிகரமாகக்கூட செயல்படுகின்றன.
எண்ணெய் வைக்கும் முறை:
தாங்குமளவு சூட்டில் தலை மற்றும் உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து, செவி ஒன்றுக்கு மூன்று துளியும், நாசி ஒன்றுக்கு இரு துளியும் இட வேண்டும். (காதில் நீர்/ சீழ் வடியும் தன்மை இருப்போருக்கு, இம்முறைக்கு மட்டும் மருத்துவ ஆலோசனை தேவை) உள்ளங்கால்களிலும் தேய்ப்பது அவசியம். 10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறிய பின், குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்கு சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தினால் நன்மை. உடலுக்கு பஞ்சகற்பப் பொடியை (கஸ்தூரி மஞ்சள், மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வித்து, வேப்பம் வித்து என அனைத்து பொருட்களையும் சமஅளவில் சேர்த்து அரைத்தது) பயன்படுத்துவதை தமிழ் மருத்துவம் ஊக்குவிக்கிறது. குளித்த பின் நன்றாக தலை, உடலை உலர்த்துவதும் முக்கியம்.
எண்ணெய் குளியல் நாளன்று தவிர்க்க வேண்டியவை:
எண்ணெய் குளியல் நாளன்று உடல் இயக்கத்திற்கு நல்ல ஓய்வு அவசியம். உடல் சூடு தணிந்திருக்கும் வேளையில், தயிர், பால், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ந்த பானங்கள் முதலிய குளிர்ச்சி உண்டாக்கும் உணவுகள் தவிர்த்து, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய அரிசி உணவுகளே அன்றைய தினத்திற்கு ஏற்றது. மேலும் மாமிசம், மது, புகை, பகல் உறக்கம், உடற்புணர்வும் விலக்கப்பட வேண்டியவை. “சனி நீராடு” என்கிறார் மஹா சித்தர் ஓளவையார். நம் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நம் வாழ்க்கை முறைக்குள் மீண்டும் எண்ணெய்க் குளியலை தவறாமல் கடைபிடிப்பதன் அவசியத்தை நினைவூட்டத்தான் இவ்வருட தீபாவளியும் சனிக்கிழமையில் அமைந்ததோ?!
எண்ணெய்களின் பிற மருத்துவ பயன்கள்:
நல்லெண்ணெய்:
மூட்டு வலி உடல் வலிக்கு நல்லெண்ணெயை மிதமான சூட்டில் தினமும் தடவி வர இழந்த நீர் மற்றும் எண்ணெய்ப் பற்றை மூட்டுக்களில் சேர்த்து வலி குறையவும், மூட்டுக்கள் பலப்படவும் உதவும். பாரம்பரிய மருத்துவ முறைகளில், வலி நிவாரண எண்ணெய்களில் (பிண்ட தைலம், உளுந்து தைலம், கற்பூராதி தைலம்) பெரும்பாலும் நல்லெண்ணையே மூலம். “கவல க்ரிஹா” எனும் பழமையான ஆயுர்வேத முறைதான், நவீன ஆயில் புல்லிங்! வெறும் வயிற்றில், சிறிது நல்லெண்ணெய்யை 10 முதல் 20 நிமிடம் வாயில் அடக்கி, கொப்பளித்து வெளியேற்றும் முறை. ஐம்புலங்களின் வாயிலாக உடலின் சமச்சீரற்ற வாத, பித்த கபத்தை சமன் செய்யவும், நாட்பட்ட நோய்களிலிருந்து மீள்வதற்கு துணை மருத்துவமாய்க் கொள்ளலாம் என்கின்றன ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள். பல், ஈறுகளின் ஆரோக்கியத்தை இம்முறை பேணுவதாக நவீன அறிவியலும் சான்றளிக்கின்றன.
விளக்கெண்ணெய்:
அடி வயிறு (கர்ப்பப்பை, கீழ்க்குடல் மூலம்/மலச்சிக்கல்) சார்ந்த பிரச்சனைகளுக்கு தமிழ் மருத்துவம் விளக்கெண்ணெய் சார்ந்த மருந்துகளையே பரிந்துரைக்கிறது. உடல் அதிக சூட்டில் அவதியுறும் சமயம், அடிவயிற்றிலும், உச்சந்தலையிலும் உள்ளங்கை, கால்களிலும் சிறிது விளக்கெண்ணெய் தடவினால் கிடைக்கும் நிவாரணம் அறிவியல் ஆதாரமற்றது என்றாலும் அனுபவத்தில் உண்மையானதே!
தேங்காய் எண்ணெய்:
வறண்ட சருமம், சிறு புண்கள், வெயில் பாதுகாப்பு (sun screen) தரமான தேங்காய் எண்ணெய் மட்டுமே போதுமான மருந்து! மேலும் சித்த மருத்துவம் கூறும் ஆறாத புண்களுக்கான ஊமத்தன் தைலமானாலும், தோல் ஒவ்வாமை அரிப்பு (allergy) அருகம்புல் தைலமானாலும், கூந்தலுக்கான நீலிபிருங்காதி, பொடுகு, பிற தோல் நோய்களுக்கான வெப்பாலை, புங்கம், குப்பைமேனி தைலங்கள் அனைத்திலும் தேங்காய் எண்ணெய்யே முக்கிய மூலம். சித்த மருத்துவ குறிப்புகள் உதவி: சித்த மருத்துவர் புவனேஷ்வரி, ஈரோடு எண்ணெய் குளியலுக்கேற்ற பாரம்பரிய எண்ணெய், குளியல் பொடிகள் மற்றும் பிற தைலங்கள் அனைத்தும் ஈஷா ஆரோக்யா மருத்துவ மையங்களில் கிடைக்கும்.

எண்ணெய்க் குளியலின் பயன்கள்:
தமிழ் மருத்துவத்தின் ஆதார நூல்களில், எண்ணெய்க் குளியலின் பயன்களாக விவரிக்கப்படுபவை: உடல் சூடு தணியும் உடல் சோர்வு, உடல் வலி நீங்கும் நல்ல உறக்கம் மெய், கண், செவி, நாசி, வாய் என புற உலகோடு நாம் தொடர்புகொள்ள உதவும் ஐம்புலன்களுக்கும் தெளிவு தோல், கூந்தல் செழுமை ஆயுள் விருத்தி உடலில் பித்தம் அதிகமாதலால் ஏற்படும் குருதி அழல் (நவீன மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்தம்), மூலச்சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், மன நிலையில் சமநிலையின்மை, வெகுவான பிரயாணம், அதிக வெப்ப சூழ்நிலையில் பணி போன்ற நிலைகளில் எண்ணெய்க் குளியலின் மகத்துவம் எளிதில் விளங்கும். மேற்கத்திய அறிவியல் ஆராய்ச்சிகளில், ‘எண்ணெய்க் குளியல்’ பற்றிய விரிவான ஆய்வுகள் இதுவரை இல்லை. எனினும், சிறு சிறு ஆய்வுகள் மூலம் எண்ணெய்க் குளியலால் மன அழுத்தம் குறைந்ததற்கான சான்றுகள் உள்ளன.
‘எண்ணெய்க் குளியல்’ முறை:
உகந்த நாட்கள்:
ஆண்கள்: புதன் மற்றும் சனி
பெண்கள்: செவ்வாய் மற்றும் வெள்ளி
உகந்த நேரம்: காலை 5 முதல் 7 மணிக்குள்
உகந்த எண்ணெய்:
தென்னிந்திய பகுதியில் வாழ்பவர்களுக்கு நல்லெண்ணெய் சிறந்தது நல்லெண்ணெயோடு பூண்டு, சிகப்பு மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, சீரகம் உடையும் பதத்தில் இறக்கி தாங்கும் சூட்டில் பயன்படுத்த வேண்டியது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. இதனை மொத்தமாய் காய்ச்சி வைத்தும் பயன்படுத்தலாம். ‘கபம்’ சார்ந்த தொல்லை இருப்பின் இதை உடல் முழுதும் தேய்த்து, தலையில் மிகக் குறைந்த அளவில் இட்டுக்கொள்ளலாம். (மாறாக கபத்தன்மை உடையோர்க்கென பிரத்யேகமான மூலிகை தைலங்களை (பீனிச தைலம்) தாராளமாய் பயன்படுத்தலாம். இவை சைனஸ் தொந்தரவு குறைவதற்கு உதவிகரமாகக்கூட செயல்படுகின்றன.
எண்ணெய் வைக்கும் முறை:
தாங்குமளவு சூட்டில் தலை மற்றும் உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து, செவி ஒன்றுக்கு மூன்று துளியும், நாசி ஒன்றுக்கு இரு துளியும் இட வேண்டும். (காதில் நீர்/ சீழ் வடியும் தன்மை இருப்போருக்கு, இம்முறைக்கு மட்டும் மருத்துவ ஆலோசனை தேவை) உள்ளங்கால்களிலும் தேய்ப்பது அவசியம். 10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறிய பின், குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்கு சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தினால் நன்மை. உடலுக்கு பஞ்சகற்பப் பொடியை (கஸ்தூரி மஞ்சள், மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வித்து, வேப்பம் வித்து என அனைத்து பொருட்களையும் சமஅளவில் சேர்த்து அரைத்தது) பயன்படுத்துவதை தமிழ் மருத்துவம் ஊக்குவிக்கிறது. குளித்த பின் நன்றாக தலை, உடலை உலர்த்துவதும் முக்கியம்.
எண்ணெய் குளியல் நாளன்று தவிர்க்க வேண்டியவை:
எண்ணெய் குளியல் நாளன்று உடல் இயக்கத்திற்கு நல்ல ஓய்வு அவசியம். உடல் சூடு தணிந்திருக்கும் வேளையில், தயிர், பால், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ந்த பானங்கள் முதலிய குளிர்ச்சி உண்டாக்கும் உணவுகள் தவிர்த்து, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய அரிசி உணவுகளே அன்றைய தினத்திற்கு ஏற்றது. மேலும் மாமிசம், மது, புகை, பகல் உறக்கம், உடற்புணர்வும் விலக்கப்பட வேண்டியவை. “சனி நீராடு” என்கிறார் மஹா சித்தர் ஓளவையார். நம் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நம் வாழ்க்கை முறைக்குள் மீண்டும் எண்ணெய்க் குளியலை தவறாமல் கடைபிடிப்பதன் அவசியத்தை நினைவூட்டத்தான் இவ்வருட தீபாவளியும் சனிக்கிழமையில் அமைந்ததோ?!
எண்ணெய்களின் பிற மருத்துவ பயன்கள்:
நல்லெண்ணெய்:
மூட்டு வலி உடல் வலிக்கு நல்லெண்ணெயை மிதமான சூட்டில் தினமும் தடவி வர இழந்த நீர் மற்றும் எண்ணெய்ப் பற்றை மூட்டுக்களில் சேர்த்து வலி குறையவும், மூட்டுக்கள் பலப்படவும் உதவும். பாரம்பரிய மருத்துவ முறைகளில், வலி நிவாரண எண்ணெய்களில் (பிண்ட தைலம், உளுந்து தைலம், கற்பூராதி தைலம்) பெரும்பாலும் நல்லெண்ணையே மூலம். “கவல க்ரிஹா” எனும் பழமையான ஆயுர்வேத முறைதான், நவீன ஆயில் புல்லிங்! வெறும் வயிற்றில், சிறிது நல்லெண்ணெய்யை 10 முதல் 20 நிமிடம் வாயில் அடக்கி, கொப்பளித்து வெளியேற்றும் முறை. ஐம்புலங்களின் வாயிலாக உடலின் சமச்சீரற்ற வாத, பித்த கபத்தை சமன் செய்யவும், நாட்பட்ட நோய்களிலிருந்து மீள்வதற்கு துணை மருத்துவமாய்க் கொள்ளலாம் என்கின்றன ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள். பல், ஈறுகளின் ஆரோக்கியத்தை இம்முறை பேணுவதாக நவீன அறிவியலும் சான்றளிக்கின்றன.
விளக்கெண்ணெய்:
அடி வயிறு (கர்ப்பப்பை, கீழ்க்குடல் மூலம்/மலச்சிக்கல்) சார்ந்த பிரச்சனைகளுக்கு தமிழ் மருத்துவம் விளக்கெண்ணெய் சார்ந்த மருந்துகளையே பரிந்துரைக்கிறது. உடல் அதிக சூட்டில் அவதியுறும் சமயம், அடிவயிற்றிலும், உச்சந்தலையிலும் உள்ளங்கை, கால்களிலும் சிறிது விளக்கெண்ணெய் தடவினால் கிடைக்கும் நிவாரணம் அறிவியல் ஆதாரமற்றது என்றாலும் அனுபவத்தில் உண்மையானதே!
தேங்காய் எண்ணெய்:
வறண்ட சருமம், சிறு புண்கள், வெயில் பாதுகாப்பு (sun screen) தரமான தேங்காய் எண்ணெய் மட்டுமே போதுமான மருந்து! மேலும் சித்த மருத்துவம் கூறும் ஆறாத புண்களுக்கான ஊமத்தன் தைலமானாலும், தோல் ஒவ்வாமை அரிப்பு (allergy) அருகம்புல் தைலமானாலும், கூந்தலுக்கான நீலிபிருங்காதி, பொடுகு, பிற தோல் நோய்களுக்கான வெப்பாலை, புங்கம், குப்பைமேனி தைலங்கள் அனைத்திலும் தேங்காய் எண்ணெய்யே முக்கிய மூலம். சித்த மருத்துவ குறிப்புகள் உதவி: சித்த மருத்துவர் புவனேஷ்வரி, ஈரோடு எண்ணெய் குளியலுக்கேற்ற பாரம்பரிய எண்ணெய், குளியல் பொடிகள் மற்றும் பிற தைலங்கள் அனைத்தும் ஈஷா ஆரோக்யா மருத்துவ மையங்களில் கிடைக்கும்.
Friday, 8 April 2016
தொழில் வாய்ப்புகள்
www.tholilvaaipugal.blogspot.com
அனைத்து வகையான தொழில் அறிய இந்த இணையதளத்தை தொடரவும் .
Subscribe to:
Comments (Atom)